ஆசிரியர் குறிப்பு
ள்ளி, கல்லூரி நாட்களிலே பேச்சு, கட்டுரை, நாடகம் மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். தமிழக முன்னாள் முதல்வர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, தமிழக முன்னாள் கவர்னர்கள்
மோஹன்லால் சுகாதியா, ப்ரபுதாஸ் பட்வாரி ஆகியோர்களிடம் இருந்து பரிசுகள் வாங்கியவர். ஈ.வே.ரா.மணியம்மையார், மன்னை நாராயணசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், என்.வி.நடராசன், க.ராஜாராம், நாஞ்சில் மனோகரன், டாக்டர் காளிமுத்து, சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அருட்செல்வர் டாக்டர் பொள்ளாட்சி நா.மகாலிங்கம், அரங்கநாயகம், டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா, செட்டிநாட்டரசர் ராஜா சர்முத்தையா செட்டியார், சி.பா.ஆதித்தனார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் மற்றும் குமரி அனந்தன் ஆகியோர்களிடம் இருந்தும் பற்பல பரிசுகள் வாங்கியவர்.

'அண்ணாவும் நாவன்மையும்' என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு, டாக்டர் கலைஞர், ''செல்வன் ராதாகிருஷ்ணனின் பேச்சு தங்கத் தாம்பாளத்திலே வைரக் கற்களை வைத்து பதித்தது போல் இருந்தது'' என்று பாராட்டினார். அகில இந்திய வானொலியில் 'இளைய பாரதம்' நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். எம்.எஸ்.ராதாகிருஷ்ணன் என்ற இயர்பெயர் கொண்ட இவர் எம்.ஏ., எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.